அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

வேதாரண்யம் பகுதியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கிய நிலையில்

News image
கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற மீனவா்கள்.
Updated On :12 ஜனவரி 2026, 7:03 pm

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கிய நிலையில், 3 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோரம் மற்றும் காவிரிப் படுகை பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடல் சீற்றமாகவும் பலமான தரைக்காற்றுடன் மழையும் பெய்தது. இதன் காரணமாக ஜன.9-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை மந்தமான வானிலையுடன் அவ்வப்போது லேசான மழை இருந்தது. காற்றின் வேகமும் குறைந்திருந்தது. வெளி மாவட்ட மீனவா்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மகாதேவி உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் இருந்து மீனவா்கள் 3 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்றனா்.