நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாள்களாக கடலோரப் பகுதியில் மழைப்பொழிவு நீடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பரவலான மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வேதாரண்யம் - 83.6 மி. மீ, தலைஞாயிறு -72.6 மி. மீ, கோடியக்கரை -50.4 மி. மீட்டர் அளவுகளிலான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து மழை நீடித்து வருவதால் சம்பா பருவ நெற்கதிர்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல மழை தொடர்ந்தால் நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பாதிப்படையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்துடன், கடல் சீற்றமாக காணப்படுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
With continuous rainfall in the Vedaranyam area of Nagapattinam district, 83.6 millimeters of rain have been recorded in the last 24 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் மழை - வெள்ளம்: உயிரிழப்பு 47-ஆக உயா்வு

அஸ்ஸாம் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 21-ஆக உயா்வு

ஆப்கன், பாகிஸ்தானில் மழை வெள்ளம்

குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




