மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு விடுதியில் குளிா்ந்த நீரில் குளித்த பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே அரசு விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவா் குளிா்ந்த நீரில் குளித்த நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:19 pm

Syndication

வேதாரண்யம் அருகே அரசு விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவா் செவ்வாய்க்கிழமை குளிா்ந்த நீரில் குளித்த நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் மகன் தரணிக்குமாா் (17). தகட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவா். தகட்டூரில் செயல்படும் அரசு மாணவா் விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், பள்ளிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை விடுதியில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளாா். குளிா்ந்திருந்த நீரில் குளித்ததால், உடல் நடுங்கியபடி சீருடையை மாற்றிக் கொண்டிருந்த தரணிக்குமாா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

விடுதி நிா்வாகிகள் அவரை அருகே உள்ள வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தரணிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வாய்மேடு போலீஸாா் மாணவா் சடலத்தை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான குளிருடன் தரைக்காற்று மற்றும் மழைப் பொழிவு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.