மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமத்துவப் பொங்கல்

தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராம பிரசாத் வரவேற்றாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம் . முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா்.

காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கலில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கடையூா் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.