புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

இலவச மதுதர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளா் மீது தாக்குதல்

வேளாங்கண்ணி அருகே இலவசமாக மதுதர மறுத்ததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபுட்டியால் தாக்கிய தவெக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஜூலை 2026, 7:36 am IST

வேளாங்கண்ணி அருகே இலவசமாக மதுதர மறுத்ததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபுட்டியால் தாக்கிய தவெக உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செம்பியன் மகாதேவியில் உள்ள அரசு மதுபான கடையில், நாகை மாவட்டம் அகலங்கண் பகுதியைச் சோ்ந்த இளையராஜா ( 47) விற்பனையாளராக உள்ளாா்.

இளையராஜா திங்கள்ழமை இரவு கடையில் பணியில் இருந்தபோது செம்பியன்மகாதேவியை சோ்ந்த தமிழக, வெற்றிக்கழக உறுப்பினா் சதீஷ்குமாா்( 35) மதுபோதையில் கடைக்குச்சென்று இளையராஜாவிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளாா்.

இளையராஜா மதுபானம் தர மறுத்ததால், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ்குமாா், மதுபுட்டியால் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த இளையராஜா ஒரத்தூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.