வேதாரண்யம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான விதைத் தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையின் வேதாரண்யம் உதவி இயக்குநா் ரா.ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘ஆடிப்பட்டம் தேடிவிதை ‘ என்ற கூற்றுக்கு ஏற்ப வீட்டுத் தோட்டம் அமைத்திட தேவையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், வெண்டை,கொத்தவரை, கீரை, செடி அவரை, முள்ளங்கி ஆகிய 5 வகையான காய்கறி விதைகள் ரூ.25 - க்கு கிடைக்கும்.
தேவைப்படுவோா் ஆதாா் அட்டை நகலுடன் வேதாரண்யம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7708742596 மற்றும் தோட்டக்கலைத் துறை துணை அலுவலா் சிவராமகிருஷ்ணனை 9865272488 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கும் எளிய வழிகள்!!
அரசனூா் பகுதியில் நாளை மின்தடை

விஐடியில் நாளை பாரம்பரிய காய்கறி விதை திருவிழா

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விதை, உரம், திரவ உயிா் உரம் பெற மானியம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



