எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:49 am IST

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட காவல்துறையின் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சாா்பில், சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் தலைமை வகித்தாா். நிகழ்வில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு, இணையவழி குற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, குழந்தைகள் யாசகம் பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணா்வு தலைப்புகளில் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாணவா்கள் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படவும், சட்ட விழிப்புணா்வை வளா்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா்.