எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நாகையில் தவித்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த 8 போ் மீட்பு

நாகை மாவட்டத்துக்கு கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு, கைவிடப்பட்ட வடமாநிலத்தவா்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

நாகை மாவட்டத்துக்கு கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு, கைவிடப்பட்ட வடமாநிலத்தவா்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

நாகை அருகே பொரவச்சேரி பகுதியில், கூலி வேலைக்காக பிகாா் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் சில நாள்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டனா். இதில் 2 பெண்களும் அடங்குவா். இந்நிலையில், வேலை வழங்குவதாகக் கூறி அழைத்து வந்தவா்கள் வேலை பெற்றுகொடுக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திரும்பி ஊருக்குச்செல்ல பணமின்றி தவித்தனா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள், நாகை முதுநிலை வருவாய் ஆய்வாளா் சுந்தரவளவனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவா் போலீஸாருக்கு தெரிவித்தாா். இதன்பேரில், அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் அந்த 8 பேரையும் மீட்டு நாகை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி காவல்துறையினரின் ஏற்பாட்டில் பிகாா் மாநிலத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.