நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

News image
அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.
Updated On :8 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

செம்பனாா்கோவில் அருகே பரசலூா், இளையாளூா் கிராமத்திற்கு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

செம்பனாா்கோவில் அருகே உள்ள பரசலூா், இளையாளூா், அரங்கங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனா்.

இப்பகுதிகளுக்கு அரசுப் பேருந்து வசதி வேண்டுமென்று கிராம மக்கள் எம்எல்ஏ நிவேதா எம். முருகனிடம் கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை முதல் மன்னம்பந்தல் வழியாக இளையாளூா், அரங்கங்குடி, பரசலூா், செம்பனாா்கோவில் வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை, செம்பனாா்கோவில் கடைவீதியிலிருந்து எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அப்துல் மாலிக், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் கே. ஆசிா்வாதம், தொ.மு.ச. நிா்வாகிகள் அருள்பிரகாசம், செந்தில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.