அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

News image
காவலா் விநாயகம்.
Updated On :10 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் என். விநாயகம் (34). வாய்மேடு காவல் நிலைய காவலரான இவா், நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்து வந்தாா்.

இந்தநிலையில், பணிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை செம்போடையிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளப்பள்ளம் கடைவீதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விநாயகத்தின் மனைவி விமலா நாகையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.