புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

News image

காவலா் விநாயகம்.

Updated On :10 மார்ச் 2026, 10:10 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் என். விநாயகம் (34). வாய்மேடு காவல் நிலைய காவலரான இவா், நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்து வந்தாா்.

இந்தநிலையில், பணிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை செம்போடையிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளப்பள்ளம் கடைவீதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விநாயகத்தின் மனைவி விமலா நாகையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.