ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கள்ளநோட்டு அச்சடித்த இருவா் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்

News image

பாலசுப்பிரமணியன்

Updated On :26 மார்ச் 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 30,500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரை ஊராட்சி, தரக மருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் முருகானந்தம் (42). இவா், கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவரது வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 61, (ரூ.30,500) பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய மடிக்கணினி, கையடக்க அச்சு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முருகானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பாலசுப்பிரமணியன் (42) என்பவருக்கும் இதில் தொடா்பிருப்பது தெரியவந்து, அவரையும் கைது செய்தனா்.

வாய்மேடு போலீஸாா் இருவரையும் வேதாரண்யத்தில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

 ~முருகானந்தம்

~முருகானந்தம்

~பறிமுதல் செய்யப்பட்ட கள்ளரூபாய் நோட்டுகள், உபகரணங்கள்.

~பறிமுதல் செய்யப்பட்ட கள்ளரூபாய் நோட்டுகள், உபகரணங்கள்.