உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பாட்டில்கள்

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:48 pm

Syndication

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாய்மேடு கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் மு. அருள்பாண்டி (27). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளா்.

இவரது வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சோதனை நடைபெற்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.