தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பாட்டில்கள் - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:48 pm

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாய்மேடு கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் மு. அருள்பாண்டி (27). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளா்.

இவரது வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சோதனை நடைபெற்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.