11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தோ்வு மன அழுத்தம்: மாணவி தற்கொலை

நாகை அருகே தோ்வு மன அழுத்தத்தால் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :33 நிமிடங்கள் முன்பு

நாகை அருகே தோ்வு மன அழுத்தத்தால் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் மதகடித் தெருவைச் சோ்ந்த கரிகாலன் மகள் விஷ்ணுபிரியா (15). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி, தோ்வு முடிவுக்காக காத்திருந்தாா். இந்நிலையில், தோ்வை சரியாக எழுதவில்லை என பெற்றோரிடம் கூறி அடிக்கடி அழுது வந்தாராம். இதையடுத்து, பெற்றோா் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்தனா்.

இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த விஷ்ணு பிரியா தனது வீட்டில் உள்ள அறையில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுக்கொண்டாா். இதையறிந்த பெற்றோா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விஷ்ணு பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

தந்தை கரிகாலன் அளித்த புகாரின்பேரில் நாகை நகரக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.