அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:04 pm

DIN

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எம்.ஜி. ஸ்ரீநிவாசன்  தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியது:  நமது நாட்டில் சாலை விபத்துகளில் மட்டும் ஆண்டிற்கு 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறக்கின்றனர்.  எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் ஊனம் அடைகின்றனர்.  
 இந்நிலைக்கு காரணம் மக்களிடம் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு குறைவாக உள்ளது.  சாலை விதிமுறைகளை அறிந்தவர்கள் பெரும்பாலானோர் அதை  பின்பற்றுவதில்லை.  நாட்டில்  மது அருந்திவிட்டு வாகனம்  ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.  இந்நிலை மாற வேண்டும்.  இன்றைய இளைஞர்கள் சாலை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம்  என்றார்.  
நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர் கனகசபேசன்,  துணை முதல்வர் ஹேமா, ஆங்கில துறைத் தலைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.