முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கருணாநிதி நலம் பெறக் கோரி அவரது தாயார் நினைவிடத்தில் கூட்டுப் பிரார்த்தனை

திருவாரூர் அருகே திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி மாணவர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:57 am IST

திருவாரூர் அருகே திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி மாணவர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது. 
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் மு. கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு இடங்களில் வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் அருகே காட்டூரில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும், திருவாரூருக்கு வந்து மக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நினைவகத்தில் மாணவர்கள் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர். இதில், திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.