17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மார்கழி திருவாதிரை: நடராஜர் வீதியுலா

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜர் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:11 am IST

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜர் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
மரக்கடை கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில், பரம்பரை தர்மகர்த்தா சுப்ரமணியன் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டின் படி, கல்யாணசுந்தரேசுவரருக்கும், மங்களாம்பிகைக்கும்  அரிசி மாவு, சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து வகை திரவியங்களால் மகாஅபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடராஜர் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வரும் காட்சி நடைபெற்றது. மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த வீதியுலாவில் திரளான பக்தர்கள் நடராஜரை வழிபட்டனர்.
இதேபோல், பண்டுதக்குடி வாஸலாம்பிகா சமேத  உமாபதீசுவரர், வேளுக்குடி ருத்ரகோடீசுவரர், கம்பர் தெருவில் அருள்பாலிக்கும் திருநீலகண்டேசுவரர், காக்கையடி கைலாசநாதர், சாத்தனூர் காளகஸ்தீசுவரர், திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆகிய சிவன் திருக் கோயில்களில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.