சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை ரயில்வே கேட் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Updated On :25 டிசம்பர் 2018, 6:12 am IST

நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை ரயில்வே கேட் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நீடாமங்கலம் ரயில்வே கேட் திங்கள்கிழமை காலை மூடப்பட்டபோது இரும்பு கம்பி (ராடு) உடைந்ததால்கேட்டை  மூடி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சங்கிலிகளைக் கொண்டு ரயில் வரும் நேரங்களில் ரயில்வே கேட் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தினர். பின்னர், தொழில்நுட்பப் பிரிவினர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், பேருந்து பயணிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், தஞ்சையிலிருந்து வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் நீடாமங்கலத்தில் திசைமாற்றி மன்னார்குடிக்கு புறப்பட்டுச் செல்லும் வரை சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.