மரத்திலிருந்து விழுந்தவர் சாவு
மன்னார்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.


மன்னார்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
நெம்மேலி, தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் க. செல்வராஜ் (48). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், இடையர்நத்தம் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூராக இருக்கும் மரக்கிளைகளை வெட்டும் பணிக்கு புதன்கிழமை சென்றிருந்தார். அவருடன் மேலச்சேரியைச் சேர்ந்த ரவி, சிவமணி ஆகியோரும் சென்றிருந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, செல்வராஜ் நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...