திருவாரூர்அருகே தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்குச் சொந்தமான சவ வண்டியை, ஒரு தரப்பினர் இறுதி ஊர்வலத்துக்கு கேட்டதாகவும், ஆனால், தேவாலய நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 10 நாள்களாக இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், ஒரு தரப்பினர் தேவாலயத்தினுள் புதன்கிழமை புகுந்து, அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









