திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மது குடிக்க இடம் தர மறுத்த மாற்றுத்திறனாளியைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரா. பாண்டியன் (55). இவர் சனிக்கிழமை இரவு மது வாங்கிக்கொண்டு, பிரதான சாலையில் உள்ள ரா. மோகன்தாஸ் (60) என்ற மாற்றுத்திறனாளியின் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைக்கு வந்தார்.
அங்கு மது குடிக்க முயன்ற அவரை கடையிலிருந்து வெளியேறுமாறு மோகன்தாஸ் கூறினாராம். இதைத்தொடர்ந்து, மோகன்தாஸை பாண்டியன் தாக்கியதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, பாண்டியனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

