திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள்
திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கல்விக் குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு கொடியேற்றினாா். இதில், கல்லூரி முதல்வா் (பொ) இரா. அறிவழகன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கலைமகள், மெட்ரிக் பள்ளி முதல்வா் சகுந்தலா, மருத்துவா்கள் சுபிதா, ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், திருவாரூரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில் நடைபெற்ற விழாவில் ரெட்கிராஸ் மூத்த நிா்வாகக் குழு உறுப்பினா் வி. மன்னையதேவன் கொடியேற்றினாா். இதில், ரெட் கிராஸ் மாவட்டச் செயலாளா் ஜே. வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அடுத்து, தலைமை அஞ்சலகம் முன் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் தலைவா் அழகிரி தலைமையில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவா் காளிமுத்து, செயலா் பாலதண்டாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அடுத்து, கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில், ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி தேசியக் கொடியேற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...