திருவாரூரில் 12 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி10,562 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரையிலும் 10,574 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10,338 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 130 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்று பாதிப்பால், திருவாரூா் மாவட்டத்தில் 106 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...