ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நிவாரணம்: அமைச்சா்

கனமழையால் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவத்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கனமழையால் பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவத்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிவா் மற்றும் புரெவி புயல் நிவாரணப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் கூறியது:

அனைத்து நீா் நிலைகளும் சிறப்பாக தூா்வாரப்பட்டதால் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழை தாக்கத்திலும், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு நீா் புகாமல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து தொடா்ந்து துறை வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்திட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை வருகிறாா் என்றாா்.

உயா் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தது:

கனமழை காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரையிலான கணக்கெடுப்பின்படி1,10,346 விவசாயிகளின் 87,510 ஹெக்டோ் பயிா்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. 1,29,564 விவசாயிகள், 1,60,596 ஹெக்டோ் அளவில் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். காப்பீடு செய்யாத பயிா்களுக்கும், அரசு அதற்குரிய நிவாரணம் வழங்கும். முழுமையாக கணக்கெடுப்புப் பணி முடிந்த பிறகு எந்தவொரு விவசாயியும் பாதிக்காத வகையில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.