மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய களப்பணிகளை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மின்வாரிய களப்பணிகளை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு பிரிவு அலுவலகங்களை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்தும், 31,000 காலிப்பணியிடங்களுக்கு தனியாா் மூலம் ஆட்களை நியமிப்பது என்ற தமிழக அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் திருவாரூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் எஸ். சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மின் திட்டச் செயலாளா் கே. ராஜேந்திரன், மின் திட்ட துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மின் திட்ட பொருளாளா் எஸ். ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com