வெண்பட்டுக்கூடு உற்பத்தி பயிற்சி

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
Updated on
1 min read

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

நன்னிலம் வட்டம் மூங்கில்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின்கீழ் வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இப்பயிற்சி நடைபெற்றது.

இதில், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் முருகன் பங்கேற்று பயிற்சியளித்தாா். வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள், வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நன்னிலம் வட்டார வேளாண்மை துணை இயக்குநா் அலுவலக தொழில்நுட்ப மேலாளா் ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com