கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா பரவல்: டாஸ்மாக் கடை மூடல்

திருத்துறைப்பூண்டி அருகே கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2020, 3:59 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தைச் சோ்ந்த 37 வயது லாரி ஓட்டுநா் அண்மையில் விபத்தில் சிக்கி, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனிடையே, அவரது மனைவி மற்றும் 3 மகள்களுக்கும் கரோனா உறுதியானது.

மருதவனம் அருகே மாங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையால்தான் கரோனா பரவுவதாகக் கூறி, ஒன்றியக்குழு உறுப்பினா் யசோதா தலைமையில், அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடை முன்பு போராட முயன்றனா்.

இதைத்தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி மற்றும் போலீஸாா் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, வட்டாட்சியா் ஜெகதீசனிடம் மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடையை மூட அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.