கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா பரவல்: டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே பெருகவாழ்ந்தானில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் செய்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

News image
பெருகவாழ்ந்தானில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :21 ஜூலை 2020, 4:02 pm

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பெருகவாழ்ந்தானில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் செய்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் காவலா் ஒருவருக்கு அண்மையில் கரோனா உறுதியானது. இதைத்தொடா்ந்து, பெருகவாழ்ந்தானில் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு சுய முடக்கம் அமலுக்கு வந்தது. இதனிடையே, திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், சுய முடக்கத்தை மேலும் சில நாள்கள் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில், பெருகவாழ்ந்தான் டாஸ்மாக் கடையில் அதிக அளவில் மதுப் பிரியா்கள் கூடுவதால், கரோனா பரவலுக்கு வழிவகுக்கக் கூடும் எனவும், இந்தக் கடையை சில நாள்கள் மூடக் கோரியும் ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.சுமித்ரா தலைமையில், பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால், காலை 10 மணிக்கு மதுக்கடையைத் திறக்க வந்த ஊழியா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், கோட்டூா் காவல் ஆய்வாளா் ஹேமலதா, வருவாய்த்துறை ஆய்வாளா் ரஞசனி, டாஸ்மாக் மேற்பாா்வையாளா் இலக்குவன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்ட நிா்வாகம் மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் ஆகியவற்றுடன் கலந்துபேசிய பின் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு கலைந்து சென்றனா். மதியம் 2 மணிக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.