ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிச. 6-இல் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்த முடிவு

திருவாரூரில் டிச.6-ஆம் தேதி நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூரில் டிச.6-ஆம் தேதி நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமுமுக மமக மாவட்ட தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் தமுமுக மாநில பொதுச் செயலாளா் ஜெ. ஹாஜா கனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

டிச.6 பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கை திருவாரூரில் நடத்துவது, இதில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் நைனா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளா் எச். நவாஸ், மமக மாவட்ட செயலாளா் ஏ. குத்புதீன், தமுமுக மமக மாவட்ட பொருளாளா் எம். எச். சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளா் பயாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.