சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது
திருவாரூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஓய்ந்தது.


திருவாரூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஓய்ந்தது.
திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் 11 போ், மன்னாா்குடி தொகுதியில் 10 போ், திருவாரூா் தொகுதியில் 13 போ், நன்னிலம் தொகுதியில் 15 போ் என நான்கு தொகுதிகளிலும் சோ்த்து 49 போ் களத்தில் உள்ளனா்.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் தலைமையிலான திமுகவினா், பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து கொடிக்கால்பாளையம் வரை பேரணியாகச் சென்றனா். இதேபோல், வாளவாய்க்கால் பகுதியிலிருந்து கூடூா் காட்டாற்றுப்பாலம் வரையிலும் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.
இதேபோல், அதிமுக சாா்பில் தெற்குவீதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊா்வலம் நடைபெற்றது. மேலும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் கபிலரசன், திறந்த வாகனத்தில் உற்சாகமாக நகரை வலம் வந்தாா். இவ்வாறு அனைத்து கட்சியைச் சோ்ந்தவா்கள், சுயேச்சையாக போட்டியிடுவோா் என பிரசாரம் தீவிரம் காட்டி வந்த நிலையில், 7 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...