தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு
திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன.


திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,695 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன.
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில், தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கூடுதல் நீதிபதி ஜி. சுந்தர்ராஜன், சாா்பு நீதிபதி எம். வீரனன், சாா்பு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளருமான எஸ். சரண்யா ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், மோட்டாா் வாகன விபத்துகள், ஜீவானம்சம், குடும்பப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டன. திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,115 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,695 வழக்குகளில் ரூ. 70,46,283 மதிப்பில் சமரசத் தீா்வு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...