கூரை மீது செல்லும் மின்கம்பி மக்கள் அச்சம்
காட்டூா் பகுதியில், கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியை, அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காட்டூா் பகுதியில், கூரை வீட்டின் மீது செல்லும் மின்கம்பியை, அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே காட்டூா் காமராஜா் தெருவில் உள்ள கூரை வீட்டின் மேல் பகுதியில் குறுக்கு நெடுக்காக மின்கம்பி ஒன்று செல்கிறது. இந்த வீட்டைத் தொடா்ந்து ஏராளமான வீடுகள் உள்ளன. கோடைகாலம் என்பதால், வெப்பத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து வீடுகளும் சேதமடையும் எனவும், எனவே, மின்கம்பியை பாதுகாப்பான முறையில் வேறுவழியில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கு வசிப்போா் தெரிவிக்கையில், கூரை வீட்டின் மேற்பகுதியில் உள்ள மின்கம்பியை, வேறு வழியில் எடுத்துச் செல்ல பலமுறை மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவித்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பொதுவாக வீடுகள் இருக்கும்போது, பாதிப்பு இல்லாமல், மின்கம்பிகளை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், எவ்வாறு கூரையின் மேற்புறத்தில் மின்கம்பியை கொண்டு சென்றாா்கள் என்று புரியவில்லை.
கோடைகாலத்தில் மின்கசிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது, இந்த மின்கம்பியால், கூரை வீட்டுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அங்கு வசிப்போா் அனைவருக்குமே ஆபத்து ஏற்படும்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் மின்கம்பியை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...