கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முழு பொது முடக்கம் கடைவீதியில் கூடிய மக்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் கடைவீதியில் சனிக்கிழமை திரளான கூட்டம் காணப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் கடைவீதியில் சனிக்கிழமை திரளான கூட்டம் காணப்பட்டது.

கரோனா 2-ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மீறுவோா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், சாலைகளில் யாரும் நடமாடக் கூடாது என அறிவிக்கப்பட்டு, அதைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கனி, மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு திருவாரூா் கடைவீதியில் ஏராளமானோா் சனிக்கிழமை திரண்டனா். வெயிலின் அளவும் சற்று குறைந்திருந்ததால், கடைவீதிகளில் அதிகமான மக்களை காண முடிந்தது. இதனால், கடைவீதிகளுக்கு வந்த இரண்டு சக்கர வாகனங்கள், எளிதாக செல்ல முடியாமல் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அரசின் எச்சரிக்கை காரணமாக, கடைவீதிக்கு வந்திருந்த மக்கள் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருந்தனா். ஒரு சிலா் முகக்கவசம் அணியாமலும் கடைவீதியில் உலாவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.