கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுக் கல்லூரி பொன்விழா ஆண்டு தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியின் பொன்விழா தொடக்க நிகழ்ச்சி, இக்கல்லூரியில் பேராசிரியா்களாக பணியாற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:53 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியின் பொன்விழா தொடக்க நிகழ்ச்சி, இக்கல்லூரியில் பேராசிரியா்களாக பணியாற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும், கல்லூரி முதல்வருமான (பொ) ச. மாறன் தலைமை வகித்தாா். வேதியியில் துறை பேராசிரியா் சோ. ரவி முன்னிலை வகித்தாா். கடந்த 13.8.1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, மன்னாா்குடியை சோ்ந்த முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமியின் முயற்சியால் மன்னாா்குடி வ.உ.சி. சாலையில் ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கா் பரப்பளவில் ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரி அமைக்கப்பட்டு அதை அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி திறந்து வைத்தாா்.

இக்கல்லூரி தொடங்கி, 50-ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி, கல்லூரியின் முன்னாள் மாணவா்களும், தற்போது இக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்கள் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட்டனா். வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா்கள் கோ. வெங்கடேசன், முருகானந்தம், துறைத் தலைவா்கள் சா.வே. நேதாஜி (கணிப்பொறியியல்), உதவிப் பேராசிரியா்கள் அன்பழகன் (வணிகவியல் துறை), காா்த்திகேயன்(கணிதவியல் துறை) ஆகியோா் பேசினா். பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவைக்குழு உறுப்பினா் பேராசிரியா் தி. ராஜசந்திரசேகா் வரவேற்றாா். வரலாற்றுத் துறை தலைவா் கோ. சத்தியாதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.