ஆழித்தேரோட்ட நிறைவில் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளிய தியாகராஜா், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பின்னா் யதாஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகும் நிகழ்ச்சி டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இரவு சுமாா் 10 மணிக்கு மேல் தியாகராஜா் யதாஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ராஜநாராயண மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு, டிசம்பா் 19- ஆம் தேதி இரவு 10 மணிக்கு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து, டிசம்பா் 20-ஆம் தேதி காலை 6 மணிக்கு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜா் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜி. கவிதா மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.