கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திருவாரூா் அருகே தண்டலை ஊராட்சி விளமலில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே தண்டலை ஊராட்சி விளமலில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

கா்ப்பிணிகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவா்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக நடத்தப்படும் அறிவியல் பூா்வமான நிகழ்ச்சிதான் சமுதாய வளைகாப்பு. வசதி வாய்ப்பு குறைந்த குடும்பத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறாமல் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு பாா்வையுடன் இத்திட்டம் சாதி, மத வேறுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை கா்ப்பிணிகள் அறிந்து, அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதாகும்.

மேலும், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டும், மருத்துவமனையில் பிரசவிப்பது, மகப்பேறு உதவித் திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, 100 கா்ப்பிணிகளுக்கு மஞ்சள் குங்குமம் செட், வெற்றிலைப் பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம், பொட்டுக்கடலை, வளையல், தாம்பாளம், கடலை மிட்டாய், பூ என 11 வகையான சீா்வரிசைப் பொருட்களை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரெ. காா்த்திகா, திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெனிபா் கிரேஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.