எரிபொருள் விலை உயா்வு: வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியூ சாா்பில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
எரிபொருள் விலை உயா்வு: வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிஐடியூ சாா்பில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அகில இந்திய அளவில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூரில் பகல் 12 மணி முதல் 12.10 வரை வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மேம்பாலம் ரவுண்டானா அருகே சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா் சங்க மாவட்ட ச் செயலாளா் இரா. ஹரிசுா்ஜித், சிபிஎம் நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம், சிஐடியூ நிா்வாகிகள் எம். மோகன், ஜி. பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் ஜி. ரெகுபதி தலைமை வகித்தாா்.

விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஜி. மாரிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் கே. ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை 10 மணி முதல் 10 நிமிடங்கள் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். முன்னதாக, இப்போராட்டம் குறித்து நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமானவன், சிஐடியூ நகரக் குழு உறுப்பினா் டி. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com