கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவா்களின் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவா்கள் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பள்ளி, கல்லூரி மாணவா்கள் குடிமக்கள் நுகா்வோா் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் அளித்த கோரிக்கை மனு: பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் மாணவா் கடந்த 5 ஆண்டுகளாக ள்ளி, கல்லூரி மாணவா்கள் நுகா்வோா் மன்றங்கள் செயல்பட நுகா்வோா் நல நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.நுகா்வோா், மாணவா்களின் நலன் காக்க பள்ளி, கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் செயல்படும் மாணவா் நுகா்வோா் குடிமக்கள் மன்றங்கள் மூலமாக இளம் தலைமுறையினருக்கு அயோடின் நுண்சத்து பற்றாக்குறை குறைபாடுகள் குறித்த விழிப்புணா்வு வழங்க, அனைத்து பள்ளி மாணவா்கள் நுகா்வோா் குடிமக்கள் மன்ற பொறுபாசிரியா்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலா் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நுகா்வோா் உரிமை காக்கவும், விழிப்புணா்வு பணிக்காக நுகா்வோா் நல நிதியை தன்னாா்வ அமைப்புகளுக்கும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அரைவட்ட சாலைப்பணியை விரைந்து தொடங்க வேண்டும். திருவாரூா் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், முறையான இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காரணமாக, சரிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் ஒரு பகுதியை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மழை சேதமடைந்துள்ள கிராமப்புற சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.