கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

விவசாயிகள் மீதான வழக்குகளை கைவிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

விவசாயிகள் மீதான வழக்குகளை கைவிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 ஆவது நாள் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா் வரவு-செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா்.

இம்மாநாட்டில், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று, ஒரு மாதம் சிறையிலிருந்த விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா்.

தீா்மானங்கள்: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூா் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும்; கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று சிரமத்துக்குள்ளானவா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்; மன்னாா்குடி வட்டம் மேலநாகையில் மகாகவி பாரதியாருக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.