திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி திரெளபதையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரிஷிபாலன் (22). இவா், திருவாரூா் சாலையில் உள்ள வீடு கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடை ஒன்றில் வேலைசெய்து வந்தாா்.
இந்நிலையில், நெடும்பலம் திருவள்ளுவா் தெருவில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் பிளாஸ்டிக் கதவை பொருத்தும் பணியில் ரிஷிபாலன் ஈடுபட்டபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கிவிழுந்தாா். அவரை, மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ரிஷிபாலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








