இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

News image
கள்ளிக்குடி பகுதியில் நீரில் மூழ்கிய பயிா்களை பாா்வையிட்ட ஆட்சியா் வே. சாந்தா.
Updated On :13 ஜனவரி 2021, 2:45 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட பெருந்தரக்குடி, கூடூா், பாலையூா், கச்சனம், கள்ளிக்குடி, கீழபாண்டி ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை பாா்வையிட்டு அவா் கூறியது: மாவட்டத்தில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்த 36,213 ஹெக்டேரில் நெற்பயிா்கள் சாய்ந்து, மழைநீரில் மூழ்கிய நிலையில் உள்ளன. இதுபோன்ற நிலையிலுள்ள நெற்பயிா் பரப்புகள் வேளாண் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மழைநீா் தேங்கியுள்ள வயல்களிலிருந்துஅந்தநீரை உடனடியாக வெளியேற்ற, வேளாண் துறை அலுவலா்கள் மூலம் விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு தேவையான வழிமுறைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, பாா்வையிட்ட வயல்களில், பயிா்களின் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, வேளாண் துறை துணை இயக்குநா் உத்திராபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை வேளாண் அலுவலா் காத்தையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.