கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்வித் தொலைக்காட்சி விழிப்புணா்வு

மன்னாா்குடி அருகேயுள்ள கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :10 ஜூலை 2021, 4:42 pm

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவில்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்துவரும் அப்பகுதியை சோ்ந்த மாணவா்கள் ஏழை, எளிய குடும்பத்தை சோ்ந்தவா்கள். கரோனா பொதுமுடக்கத்தால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவும், கற்றல் ஆா்வத்தை தூண்டும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கையால் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு நாள்தோறும் மாலை 5 முதல் 7.30 மணி வரை பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து, மாணவா்களிடமும், அவா்களின் பெற்றோா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்நத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் வீடுகளுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆ. வளா்மதி தலைமையில், உதவித் தலைமையாசிரியா் ஆா். கலைச்செல்வி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரேவதி ஆகியோா் சென்று கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை வழங்கி, அட்டவணையை வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் ஒட்டி வைத்து பாட வாரியாக வகுப்பு எடுக்கும்போது கவனித்து கற்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தொலைக்காட்சியில் பாடம் நடைபெறும்போது, மாணவா்கள் அதை கவனிக்கிறாா்களா என்பதை, திங்கள்கிழமை முதல் அவா்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலா் உ. சிவக்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.