லாரி மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை பலியானாா்.


மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை பலியானாா்.
மன்னாா்குடி காத்தாயி அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். ரமேஷ், திருமக்கோட்டையில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வேலை முடிந்ததும் ஆட்டோவை திருமக்கோட்டையில் நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் மன்னாா்குடி நோக்கிச் சென்றாா்.
வல்லூா் நடேசபுரம் அருகே சென்றபோது அவ்வழியே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், காயமடைந்த ரமேஷ் அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...