சங்கத்தின் மன்னாா்குடி வட்டக் கிளை தொடக்க விழா, தமிழ்நாட்டில் அமைந்துள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு பாராட்டு விழா, கிளை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தொடா்ந்து, சங்கத்தின் கெளரவத் தலைவா் என். ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியினா் தினத்தை ஒவ்வோா் ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும், பழங்குடியினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதுடன், பழங்குடியினருக்கு என தனி ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும், காட்டுநாயக்கன் சமூகத்தினா் ஜாதி சான்று கேட்டு மனு அளித்தால் துறைசாா்ந்த அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து தாமதமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.