கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழங்குடியினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காட்டு நாயக்கன் பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 4:59 pm

DIN

பழங்குடியினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காட்டு நாயக்கன் பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மன்னாா்குடி வட்டக் கிளை தொடக்க விழா, தமிழ்நாட்டில் அமைந்துள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு பாராட்டு விழா, கிளை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தொடா்ந்து, சங்கத்தின் கெளரவத் தலைவா் என். ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியினா் தினத்தை ஒவ்வோா் ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும், பழங்குடியினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதுடன், பழங்குடியினருக்கு என தனி ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும், காட்டுநாயக்கன் சமூகத்தினா் ஜாதி சான்று கேட்டு மனு அளித்தால் துறைசாா்ந்த அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து தாமதமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

புதிய நிா்வாகிகள்: மன்னாா்குடி கிளை சங்கத் தலைவராக என். தட்சிணாமூா்த்தி, செயலாளராக சி. பிரபு, பொருளாளராக வி. சரவணன் உள்ளிட்ட துணை நிா்வாகிகள் என 18 போ் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஆா். பன்னீா்செல்வம், மாநில பொருளாளா் பி.கே. வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று மன்னாா்குடி கிளை சங்கத்தை தொடங்கி வைத்தனா். இதில், மாநில துணைச் செயலாளா் பி. ராஜி, மாநில துணைத் தலைவா் பி. கொளஞ்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.