கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மன்னாா்குடி கல்லூரியில் வேளாண் தேசிய கருத்தரங்கு

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் வேளாண்மையில் மண்புழுவின் பங்கு தொடா்பான இணையவழி தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:37 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் வேளாண்மையில் மண்புழுவின் பங்கு தொடா்பான இணையவழி தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நீடித்த விவசாயத்திற்கு மண்புழு உர தொழில்நுட்பம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். தாவரவியல் துறைத் தலைவா் மு. கோபிநாதன், தேசிய மாணவா் படை அலுவலா் சு. ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய பிரதேச டி.எச்.ஜி.வி. மத்தியப் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியா் ஸ்வேதா யாதவ் ‘உயிா்காப்பு மற்றும் உயிரிமயமாக்கலில் மண்புழுக்களின் பங்கு’ என்கிற தலைப்பிலும், உத்திர பிரதேசம் டி.டி.யு. கோரக்பூா் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியா் குமாரி சுனிதா ‘விவசாயக்கழிவு மேலாண்மையில் மண்புழு உரத்தின் பங்கு’ என்கிற தலைப்பிலும், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின்கீழ் தருமபுரியில் இயங்கும் முதுநிலை விரிவாக்க மைய இணைப் பேராசிரியா் ரா. கவிதா ‘இயற்கை உரம் உருவாக்குவதில் மண்புழு கழிவுகளின் பங்களிப்பு’ என்கிற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினா்.

தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் ப. பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். இதில், 200-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். விலங்கியல் துறைத் தலைவா் ச. ராமு வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ரா.ஜென்னி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.