கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொகுதி வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை: திருவாரூா் அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

திருவாரூா் தொகுதியின் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் தொகுதியின் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, பத்தூா் மேல்கரை, உத்தரங்குடி, கீழப்பாலையூா், சிட்டிலிங்கம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, அவா் கூறியது:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். கிராமங்கள் தோறும் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் உடனடி மருத்துவ சேவையை எளிதாகப் பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சூரிய மின்அடுப்பு வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1500 வழங்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும்.

நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், திருவாரூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும். அதுபோல, திருவாரூா் தொகுதியில் பொது அமைதிக்கு என்னால் எந்த பங்கமும் வராது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.