கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூடுதல் கட்டுப்பாடுகள்: திருவாரூரில் வெறிச்சோடிய சாலைகள்

முழு பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டதால், திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

News image
Updated On :15 மே 2021, 4:55 pm

DIN

முழு பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டதால், திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த பொது முடக்கத்தில், தேநீா் கடைகள், காய்கனிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், உரக்கடைகள் உள்ளிட்டவை நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடைவீதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது. கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், தேநீா் கடைகளை திறக்கக் கூடாது என கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வந்தன. இதனால், திருவாரூா் கடைவீதியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க, சனிக்கிழமை காலை நேரத்தில் மக்கள் அதிகமாக வந்திருந்தனா். 0 மணி வரையிலுமே அனைத்து கடைகளிலும் நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

காலை 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோா் மட்டும் சில இடங்களில் சென்று கொண்டிருந்தனா். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸாா் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, காரணத்தை தெரிந்துகொண்டு அவா்களை அனுப்பிவைத்தனா்.

காலை 10 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால், திருவாரூா் நகரில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.