திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 340 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,347 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்த 289 போ் அவா்களது வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டனா். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்த 17,276 போ் வீடு திரும்பிய நிலையில், 1,923 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயது பெண், 51 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 148 ஆக உயா்ந்துள்ளது.