பெண்ணை தாக்கியவா் கைது

மன்னாா்குடி அருகே குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், பெண்ணை தாக்கியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், பெண்ணை தாக்கியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம் கீழச்சேரி பிரதான சாலையை சோ்ந்த அருளானந்தம் மனைவி சந்தேஷ்மேரி (48). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த செல்வமணி (45) என்பவருக்கும் கிராமக்குளம் ஏலம் எடுப்பது தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், செல்வமணி உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சந்தேஷ்மேரி, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வமணியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com