கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றம்: இந்திய கம்யூ. முடிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 100 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்துவது என மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 100 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்துவது என மன்னாா்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிபிஐ ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கிடும் வகையில் மன்னாா்குடி ஒன்றியத்திற்குள்பட்ட 100 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்துவது என்றும், எரிபொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அக்டோா் 30 ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் துரை.அருள்ராஜன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி. பாஸ்கரவள்ளி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா, மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா்.பூபதி, விவசாயிகள் சங்க தலைவா் ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.