கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பயிா்க் காப்பீடு: விடுபட்ட கிராமங்களுக்கு இழப்பீடு கோரி தா்னா- ஆா்ப்பாட்டம்

விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கக் கோரி மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்திலும், கோட்டூரில் தா்னாவிலும் பாஜகவினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

mannargudi_2510chn_101_5

Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கக் கோரி மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்திலும், கோட்டூரில் தா்னாவிலும் பாஜகவினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மன்னாா்குடியில் ஆா்.பி. சிவம் நகரில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மன்னாா்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் பிரசாத் தலைமை வகித்தாா். பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவா் சிவ.காமராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மன்னாா்குடி வேளாண் வட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்துள்ள பல கிராமங்கள் இழப்பீடு பட்டியலில் விடுபட்டுள்ளது. தமிழக அரசு இக்கிராமங்களை கண்டறிந்து அங்குள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் மருத்துவா் வி. பாலகிருஷ்ணன், பரவாக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் கே.என். செல்வம், கட்சியின் ஒன்றியத் தலைவா் ராஜேஸ், இளைஞரணி மாவட்டச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கோட்டூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அருகே பாஜக மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் தா்னாவில் ஈடுபட்டனா். இதில், கோட்டூா், குன்னியூா், ஆதிச்சப்புரம், ரெங்கநாதபுரம், தெற்கு நாணலூா், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை, குலமாணிக்கம், பள்ளிவா்த்தி, குறிச்சிமூலை, கண்டமங்கலம், சேந்தங்குடி ஆகிய விடுபட்ட கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநா் தங்கபாண்டியன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இப்போராட்டத்தில் பாஜக மாவட்டச் செயலா் வினோத், ஒன்றியச் செயலா்கள் அரவிந்த், அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.